History_banner2

History

"வணிகத்தின் சமூகப் பொறுப்பு விருப்பமானது அல்ல, கட்டாயமான தாகும். எங்கள் நிறுவனர்கள் 1970 இல் இந்த நோக்கத்துடனும், அவர்கள் பணிபுரிந்த சமூகங்களை ஆதரிக்கும் நோக்குடனும், TCT ஐ உருவாக்கினர்,

திருமலை அறக்கட்டளை கடந்த 2020 ஆம் ஆண்டு தனது 50 ஆம் ஆண்டினை நிறைவு செய்தது. 

மும்பையிலும் சென்னையிலும் உள்ள பிரபலமான நிறுவனங்களின் நிதி நல்கையின் மூலம் கல்வி மற்றும் சுகாதார செயல் திட்டங்களை TCT தொடக்க ஆண்டுகளில் செய்து வந்தது. 1983 இல் தனது சேவையை தமிழ்நாட்டில், வேலூரில் (அப்போது வட ஆற்காடு மாவட்டம்) திருவலத்தில் ஒரு மருத்துவ மையத்தை TCT தொடங்கியது. 1988 ஆம் ஆண்டில், இந்த அனுபவதின் மூலம் இந்த அறக்கட்டளை உள்ளூர் பெண் தன்னார்வளர்களைக் கொண்டு சமூக அடிப்படையிலான சுகாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நிர்வகித்தது. இந்த அமைப்பு சமூகத்தின் தேவைக்கும் சூழலுக்கும் ஏற்ப விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டங்கள் கிராமப்புற நிலைமையை மேம்படுத்த குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது.

முக்கிய மைல்கற்கள்

1983
முதல் மருத்துவ மருந்தகம்
1-First-medical-dispensiry
1988
முதலுதவி பெட்டியுடன் தன்னார்வலர்
2.The-village-volunteer-after-training
1992
வருடாந்திர சமூக அடிப்படையிலான போதை ஒழிப்பு முகாம்கள்
3.Alcoholism-awareness-and-deaddiction
1993
மாலை நேரக் கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள்
4.1993-Rural-Study-and-Recreation-Centres
1994
மகளிர் சுய உதவிக் குழுக்கள்
1994
அட்சய வித்யா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வேதவல்லி வித்யாலயா
1995
கால்நடை பராமரிப்பு
1996
மாற்றுத் திறனாளிகளுக்கான செயல் திட்டங்கள்
8.1996-Programme-for-differently-abled-people
1998
சமூக சுகாதாரம் மற்றும் அபிவிருத்தி செயல் திட்டம்
9.The-TCT-Trained-Village-Health-worker-on-rounds
2005
சுனாமியால் பாதிக்கப்பட்ட நாகைக்கு குடிநீர் திட்டம்
10.2015-Inauguration-of-RO-plant-in-Nagai-300x181
2010
ராணிப்பேட்டை திருமலை மிஷன் மருத்துவமனை (TMH)
2014
என்.ஆர். சுவாமி மறுவாழ்வு மற்றும் ஆரோக்கிய மையம்
12.N.R.-Swamy-Rehab-_-Wellness-Centre
2015
திருமலை மிஷன் சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சி அலகு
2020
TMH: நீட்டிக்கப்பட்ட இரண்டாம் நிலை பராமரிப்பு
2022
பெண்களுக்கு மட்டுமான கால்பந்துப் பயிற்சி
2022
TMH சுகாதார நிலையம், முத்துக்கடை
16.CT3

பல ஆண்டுகளாக கிராமப்புற மக்களுடன் கொண்டிருந்த நெருக்கமான ஈடுபாடு அவர்களின் வெவ்வேறு தேவைகளைப் புரிந்து கொள்ள எங்களுக்கு உதவியது. இந்தப் புரிதல் மற்றும் அப்பகுதியில் வளர்ந்து வரும் வேர்கள் மூலம், TCT.யின் திட்ட முன்வடிவில் (போர்ட்ஃபோலியோவில்) குடிப்பழக்கத்திலிருந்து விடுவிப்பு, பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் பொழுதுபோக்கு மையங்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் நுண்நிதியளிப்பு, கால்நடை பராமரிப்பு, ஆரம்ப சுகாதாரம் போன்றவற்றை உள்ளடக்கியதாக வளர்ந்தது.

திட்டங்கள் வளர வளர, எங்கள் திட்டங்களின் எல்லையும் விரிவடைந்தது. ஒரு கிராமத்தில் ஒரு மருத்துவ மையத்தில் தொடங்கி, TCT இப்போது ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் 1,60,000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேவை செய்கிறது. சில திட்டங்கள் வளர்ந்தவுடன், சமூகம் வளர்ச்சியடைந்து மாறியபோது சில திட்டங்கள் சிறிதாகியது. சமூகத்தில் அதன் ஆழமான வேர்களுடன், TCT அது வழங்கும் சேவைகள் அவசியமானவை மற்றும் தேவையற்றவை என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

திருமலை மிஷன் மருத்துவமனை 2010 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, அதன் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் மூலம், பல துறைகளில் தரமான வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சுகாதார சேவைகளை வழங்குவதுடன், சமூகத்தில் உள்ள பல முக்கிய பிரச்சினைகளைப் பொருத்தமான திட்டங்களின் மூலம் நாம் தீர்க்க முடிகிறது. எமது ஐம்பதாண்டு அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், பொறுப்புள்ள மற்றும் அறநெறி ரீதியான கவனிப்பு என்ற எமது தத்துவத்துடன் அவர்களின் தேவைகளைப் பொருத்துவதன் மூலம் சமூகத்திற்கான எமது சேவையைத் தொடர முடியும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம். எமது ஐம்பதாண்டு அனுபவங்களைத் திரும்பிப் பார்க்கையில், பொறுப்புள்ள மற்றும் அறநெறி ரீதியான கவனிப்பு என்ற எமது தத்துவத்துடன் அவர்களின் தேவைகளைப் பொருத்துவதன் மூலம் சமூகத்திற்கான எமது சேவையைத் தொடர முடியும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம்.

திருமலை தொண்டு அறக்கட்டளையின் வரலாற்றில் ஒரு பார்வை

திரு. S. சந்தானம்
திரு. S. சந்தானம் தனது தொழில் வாழ்க்கை முழுவதும் இரசாயன உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் அல்ட்ராமரைன் மற்றும் பிக்மென்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநராகவும், திருமலை கெமிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகவும் உள்ள இவர் பல்வேறு சமூக வளர்ச்சித் திட்டங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் சர்வதேச மனிதாபிமான இயக்கத்தின் ஒரு குழு உறுப்பினராவார், மேலும் சமூக மாற்றத்தைக் கொண்டுவர தன்னார்வ நடவடிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தின் மேம்பாட்டிற்குத் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், மும்பையின் வடாலாவில் உள்ள சமூகத்தை அணிதிரட்டி, சுற்றுப்புறத்தை பசுமையாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார். உயர்நிலைப் பள்ளி, என்.ஆர். சுவாமி வணிகவியல் கல்லூரி மற்றும் திருமலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளை நிர்வகிக்கும் தென்னிந்திய நலச்சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராக இருந்தார். அவர் அச்சுத் தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். இவர் திருமலை அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் அறங்காவலர் ஆவார்.
ta_INதமிழ்